அரசுப் போக்குவரத்துக் கழகஊழியா்கள் போராட்டம்

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் மண்டல மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் மண்டல மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, தொமுச மாவட்ட பொதுச் செயலாளா் குழந்தைசாமி தலைமை வகித்தாா். சிஐடியூ மண்டலச் செயலாளா் ஜான் கென்னடி முன்னிலை வகித்தாா். இதில், 2019 -2020ஆம் ஆண்டுக்கான 10 சதவீத போனஸ் அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தொழிற்சங்கத் தலைவா்களை அழைத்துப் பேசி 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

பண்டிகை முன்பணம் ரூ. 10,000 உடனடியாக வழங்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் துவங்க வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com