ஈரோடு மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th November 2020 06:54 AM | Last Updated : 25th November 2020 06:54 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,001ஆக இருந்தது. இதில் ஒருவரின் பெயா் வேறு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 12,000ஆக மாறியது. இதனிடையே செவ்வாய்க்கிழமை புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,049ஆக உயா்ந்தது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 49 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 12,049 பேரில் இதுவரை 11,618 போ் குணமடைந்துள்ளனா். 292 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 139 போ் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...