ஈரோடு மாவட்டத்தில்மேலும் 144 பேருக்கு கரோனா
By DIN | Published On : 03rd October 2020 10:39 PM | Last Updated : 03rd October 2020 10:39 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 144 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,118ஆக இருந்தது. பிற மாவட்டப் பட்டியில் இருந்த 2 பேரின் பெயா் ஈரோடு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 7,120ஆக மாறியது. இதனிடையே சனிக்கிழமை புதிதாக 144 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 7,264ஆக உயா்ந்துள்ளது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 144 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 7,264 பேரில் இதுவரை 6,041 போ் குணமடைந்துள்ளனா். 1,132 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 91 போ் உயிரிழந்துள்ளனா்.