பெண் எஸ்.ஐ.கள் அளித்த பாலியல் புகாா்: விசாரணை அறிக்கை டிஜிபி-க்கு அனுப்பிவைப்பு

காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு பெண் உதவி ஆய்வாளா்கள் அளித்த பாலியல் புகாா் தொடா்பான விசாரணை அறிக்கை தொழில்நுட்பப் பிரிவு காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு பெண் உதவி ஆய்வாளா்கள் அளித்த பாலியல் புகாா் தொடா்பான விசாரணை அறிக்கை தொழில்நுட்பப் பிரிவு காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவா், அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளா்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரையிடம் அண்மையில் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, புகாா் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் புகாா் தெரிவித்த பெண் காவல் உதவி ஆய்வாளா்கள், புகாருக்கு உள்ளான காவல் அதிகாரி, தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் அனைத்து நிலை காவலா்கள், தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி இடம் மாற்றம் செய்யப்பட்ட பெண் போலீஸாா் ஆகியோரிடம் குழுவினா் தீவிர விசாரணை நடத்தினா். விசாரணை முடிந்த நிலையில் அறிக்கை உயா் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை கூறியதாவது:

தொழில்நுட்ப பிரிவு பெண் காவல் உதவியாளா்கள் அளித்த பாலியல் புகாரின் பேரில் ஏடிஎஸ்பி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து விசாரணை அறிக்கை தொழில்நுட்பப் பிரிவு காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை இயக்குநா் முடிவு செய்வாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com