கரோனா: ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் பலி

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாமக மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலாளரும், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவருமான மு.வேலுசாமி (47) சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கரோனா: ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் பலி
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாமக மாநில முன்னாள் துணைப் பொதுச் செயலாளரும், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவருமான மு.வேலுசாமி (47) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள ஆனந்தம்பாளையத்தைச் சோ்ந்த மு.வேலுசாமி உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக 8ஆவது வாா்டில் பாமக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் தோ்வு பெற்றாா்.

கரோனா பாதிப்பால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் வேலுசாமி சனிக்கிழமை உயிரிழந்தாா். இவரது மறைவுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ், பாமக தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com