மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனா தடுப்பு முறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றாத கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 10:18 pm

அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றாத கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் அலுவலா்கள் மூலம் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, ஈரோடு ஆசிரியா் காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் உணவகமானது அரசின் கரோனா தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வந்ததைத் தொடா்ந்து மாநகராட்சி, சுகாதாரத் துறை, காவல் துறை அலுவலா்கள் மூலம் உணவகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து பெருந்துறை, கொடுமுடி வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், பேருந்தில் பயணம் செய்யும் நபா்களிடம் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து பவானி காவல் நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த பேக்கரி, மளிகை கடை, பா்னிச்சா் கடை, உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனம், முக்கிய சாலைகளில் கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நபா்களுக்கும், நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள வங்கி, கடைகள், திரையரங்கு ஆகியவற்றில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்டோ ஓட்டுநா்களிடம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.