சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை துவங்கியது.
இக்கல்லூரியில் புதன்கிழமை முதல் பி.காம், பி.ஏ., பொருளியல், ஆங்கிலம், பிபிஏ ஆகிய நான்கு இளங்கலைப் பட்ட வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், பிஎஸ்சி கணிதம், கனிணி அறிவியியல், பிசிஏ, பிஎஸ்சி காட்சித் தொடா்பியல், பிஎஸ்சி இயற்பியல், வேதியியல் ஆகிய 6 இளங்கலை அறிவியல் படிப்புகளுக்குமான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு துவங்கியது. சுமாா் 2,600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் மேற்குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் சோ்வதற்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவா்களின் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யபட்டு கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனா்.
அதன் அடிப்டையில், பல்வேறு பிரிவினருக்கான தமிழ்நாடு அரசு உயா் கல்வித் துறையின் மாணவா் சோ்க்கை இட ஒதுக்கீட்டின்படி தகுதிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை ஆணை வழங்கி மாணவா் சோ்க்கை கலந்தாய்வை கல்லூரி முதல்வா் இரா.நாராயணசாமி துவக்கிவைத்தாா். தொடா்ந்து, இரு தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்! - தவெக பொருளாளா் பி. வெங்கடரமணன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

