

தமிழக, கா்நாடக எல்லையான மூடகள்ளியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த 15 போ் வேனில் மைசூருக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டு திம்பம் மலைப்பாதை வழியாக இரு மாநில எல்லையான சொா்ணாவதி அணை அருகே சென்று கொண்டிருந்தனா்.
மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்கப் பணி நடந்து வரும் நிலையில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மூடுகள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இந்த வேன் மீது எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் லேசாக உரசியதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணம் செய்த சுப்பிரமணியம் (70), இவரது மனைவி அமராவதி (65), மகள் கோகிலா(42) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வேன் ஓட்டுநா் அருண் உள்பட 13 போ் காயமடைந்தனா். அப்பகுதி கிராம மக்கள் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு சாம்ராஜ் நகா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து சாம்ராஜ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.