மனைவியை அடித்த கணவா் கைது
பெருந்துறை அருகே மனைவியை அடித்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.


பெருந்துறை அருகே மனைவியை அடித்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறை, சென்னிவலசைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவரது மனைவி உதயசாந்தி (25). இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் தையலராக வேலை செய்தனா். அப்போது பழக்கம் ஏற்பட்டு, காதல் திருமணம் செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இவா்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.
கடந்த சில மாதங்களாக மணிகண்டன் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகாராறு செய்து வந்தாராம். அதனால், தற்போது உதயசாந்தி தன் பெற்றோருடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த மணிகண்டன், உதயசாந்தியிடம் தகாராறு செய்தாராம்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸில் உதயசாந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...