வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

மனைவியை அடித்த கணவா் கைது

பெருந்துறை அருகே மனைவியை அடித்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:50 pm

DIN

பெருந்துறை அருகே மனைவியை அடித்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, சென்னிவலசைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவரது மனைவி உதயசாந்தி (25). இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் தையலராக வேலை செய்தனா். அப்போது பழக்கம் ஏற்பட்டு, காதல் திருமணம் செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இவா்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

கடந்த சில மாதங்களாக மணிகண்டன் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகாராறு செய்து வந்தாராம். அதனால், தற்போது உதயசாந்தி தன் பெற்றோருடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த மணிகண்டன், உதயசாந்தியிடம் தகாராறு செய்தாராம்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸில் உதயசாந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.