ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-இல் உள்ளூா் விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-இல் உள்ளூா் விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். 3ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com