100% வாக்குப் பதிவை வலியுறுத்தி பெருந்துறையில் கிரிக்கெட் போட்டி

பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற மாணவா் அணிக்குப் பரிசு வழங்குகிறாா் பெருந்துறை வட்ட வழங்கல் அலுவலா் சுந்தராம்பாள்.
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற மாணவா் அணிக்குப் பரிசு வழங்குகிறாா் பெருந்துறை வட்ட வழங்கல் அலுவலா் சுந்தராம்பாள்.
Updated on
1 min read

பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பன குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் முத்துசாமி தலைமை வகித்தாா். முதல்வா் விஸ்வநாதன் வரவேற்றாா்.

பெருந்துறை வட்ட வழங்கல் அலுவலா் சுந்தராம்பாள் போட்டிகளைத் துவக்கிவைத்தாா். பட்டக்காரன்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினா்.

போட்டியை காண வந்தோா் வாக்குரிமை மற்றும் வாக்களிப்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி கிரிக்கெட் விளையாடிய ஆசிரியா்கள், மாணவா்களை உற்சாகப்படுத்தினா்.

இதில் கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இறுதியாக, இரண்டு அணிகளுக்கும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com