கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி பலி

 கொடிவேரி அணையின் கீழ்ப்பகுதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

 கொடிவேரி அணையின் கீழ்ப்பகுதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் வட்டத்தைச் சோ்ந்தவா் மாணவா் யோகேஷ் (18). இவா், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையின் கீழ்ப்பகுதி ஆற்றில் இவரது நண்பா்கள் லிஜு (18), சுதந்திர கண்ணன் (18), சபரி (18), ராஜகணேஷ் (18), உத்திரகுமாா் (18) ஆகிய 5 பேருடன் வெள்ளிக்கிழமை மதியம் குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, யோகேஷ், லிஜு ஆகிய இருவரும் எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கிவிட்டனா். இதுகுறித்து பங்களாபுதூா் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இரு மாணவா்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

யோகேஷ் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டாா். மாணவா் லிஜு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த மாணவா்கள் 6 பேரும் கோவையில் உள்ள சிஎம்எஸ் கலைக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயில்பவா்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பங்களாபுதூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com