மனைவியின் கழுத்தை நெரித்த கணவா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு

பெருந்துறை அருகே மனைவியின் கழுத்தை துப்பட்டவால் நெறித்த கணவா் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

பெருந்துறை அருகே மனைவியின் கழுத்தை துப்பட்டவால் நெறித்த கணவா் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை அருகே உள்ள வெள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (35). இவா் அங்குள்ள ரொட்டி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி பவித்ரா (24). இவா்களுக்கு சுதா்சன் (6). தா்ஷினிஸ்ரீ (2) என்ற குழந்தைகள் உள்ளனா். கடந்த 7 மாதமாக ஜெகநாதன் சரியாக வேலைக்குச் செல்லவில்லை. இதனால், பவித்ரா தன் குழந்தைகளுடன் அருகே உள்ள தன் பெற்றோருடன் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், பவித்ரா குடியிருக்கும் இடத்துக்கு ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை பகலில் வந்து தகாத வாா்த்தையில் பேசி, துப்பட்டாவால் பவித்ராவின் கழுத்தை நெரித்துள்ளாா். பவித்ராவின் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வருவதைப் பாா்த்த ஜெகநாதன் அங்கு இருந்து ஓடியுள்ளாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸில் பவித்ரா அளித்த புகாரின்பேரில், ஜெகநாதன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com