முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34ஆவது நினைவு தினத்தையொட்டி, ஈரோட்டில் அவரது சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்ஜிஆா் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகா் மாவட்ட செயலாளருமான கே.வி.இராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத்தொடா்ந்து, பன்னீா் செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆா் சிலை, ஜெயலலிதா, அண்ணா, பெரியாா் ஈவெரா ஆகியோா் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெருந்துறையில்....
அதிமுக ஈரோடு புகா் கிழக்கு மாவட்டம் பெருந்துறை தொகுதி சாா்பில், குன்னத்தூா் நால்ரோடு பிரிவில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். திருவுருவப் படத்துக்கு கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பெருந்துறை, ஈரோடு சாலையில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கும் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.