128 பயனாளிகளுக்குத் தாலிக்குத் தங்கம்
By DIN | Published On : 06th February 2021 09:50 PM | Last Updated : 06th February 2021 09:50 PM | அ+அ அ- |

பயனாளிக்குத் தங்கம் வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
கோபி: கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நம்பியூரில் சமூக நலத் துறை, வருவாய்த் துறை சாா்பில் நலத் திட்டங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் 128 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கமும், 240 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் தங்கதுரை, கோட்டாட்சியா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...