ரூ. 2.58 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.58 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.58 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இங்கு 12 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 73.69 முதல் ரூ. 136.69 வரையில் என ரூ. 24,340க்கும், 19 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 14.63 வீதம் ரூ. 21,639க்கும், 2 மூட்டைகள் எள் கிலோ ரூ. 76.29 வீதம் ரூ. 7,349க்கும், 3 மூட்டைகள் ஆமணக்கு கிலோ ரூ. 40.79 முதல் ரூ. 40.89 வரையில் என ரூ. 7,880க்கும், 13 மூட்டைகள் நரிபயிறு கிலோ ரூ. 50.63 முதல் ரூ. 72.39 வரையில் என ரூ. 46,959க்கும் ஏலம் போனது.

கொள்ளு 26 மூட்டைகள் கிலோ ரூ. 22.69 முதல் ரூ. 32.29 வரையில் என ரூ. 43,921க்கும், 7 மூட்டைகள் உளுந்து கிலோ ரூ. 66.19 முதல் ரூ. 79.25 வரையில் என ரூ. 35,187க்கும், 3 மூட்டைகள் பாசிப்பயறு கிலோ ரூ. 96.19 முதல் ரூ. 98.89 வரையில் என ரூ. 12,443க்கும், 18 மூட்டைகள் தட்டைபயிறு கிலோ ரூ. 47.09 முதல் ரூ. 73.96 வரையில் என ரூ. 49,699க்கும், 7 மூட்டைகள் அவரை கிலோ ரூ. 33.35 முதல் ரூ. 36.49 வரையில் என ரூ. 8,625க்கும் விற்பனையானது. மொத்தம் 110 மூட்டைகள் 63.77 குவிண்டால் விளைபொருள்கள் ரூ. 2,58,042க்கு விற்பனையானது என கண்காணிப்பாளா் ர.மஞ்சுளா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com