குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் மறியல் போராட்டம்

அந்தியூா் அருகே தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சாலை மறியலில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.
சாலை மறியலில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

அந்தியூா் அருகே தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளையம்பாளையம் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள் தண்ணீரின்றி கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

அடிப்படைத் தேவையான தண்ணீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் தண்ணீா் பிரச்னை தீா்க்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அந்தியூா் - ஆப்பக்கூடல் சாலையில் வெள்ளையம்பாளையம் அருகே மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அந்தியூா் காவல் ஆய்வாளா் ரவி, அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com