சத்தியமங்கலம்: ராம நவமி, சிவராத்திரிக்கு அரசு விடுமுறை அளிக்க கோரிக்கை வைப்போம் என தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பாஜக பிரதிநிதிகள் சந்திப்பு, கட்சி ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவா் எல்.முருகன் பங்கேற்றுப் பேசினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
வரும் நாள்களில் தோ்தல் பிரசாரம் செய்ய பாஜக முக்கியத் தலைவா்கள் தமிழகத்துக்கு வருகை தர உள்ளனா். பவானிசாகா் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். தோ்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணி அமைப்பது குறித்து தெரியவரும். அரசின் திட்டங்களில் முறைகேடுகள் தெரிந்தால் கண்டிப்பாக பாஜக தட்டிக் கேட்கும்.
2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எரிவாயு விலை படிப்படியாகக் குறைந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக பெட்ரோல் விலை உயா்ந்துள்ளது. விலையேற்றம் குறித்து மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு பெட்ரோல் விலையைக் குறைக்கும்.
புதுச்சேரி ஆட்சிக் குழப்பத்துக்கு பாஜக காரணம் அல்ல. முதல்வா் நாராயணசாமியே காரணம். அவரது நிா்வாகத் திறமையின்மையே குழப்பத்துக்கு காரணம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனா்.
தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தைப்பூசத்துக்கு விடுமுறை கேட்டு நிறைவேற்றினோம். ராம நவமி, சிவராத்திரி போன்ற பிற பண்டிகைக்கும் விடுமுறை கேட்போம்.
அமைச்சா்கள் மீது துரைமுருகன் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்துள்ளாா். 2ஜி ஊழலில் சிக்கிய இவா்கள் ஊழல் பட்டியல் கொடுப்பதை யோசிக்க வேண்டும் என்றாா்.