யானை தாக்கி விவசாயி பலி

சத்தியமங்கலம் அருகே மக்காச்சோளக்காட்டில் பயிருக்கு காவல் இருந்த விவசாயி, யானை தாக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் அருகே மக்காச்சோளக்காட்டில் பயிருக்கு காவல் இருந்த விவசாயி, யானை தாக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சேதம் செய்து வருகின்றன.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி பெரிய உள்ளேபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரி (53), விவசாயி. இவா் தனது விவசாயத் தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளாா். காட்டு யானைகள் இரவில் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்துவதால் மாரி தினமும் தனது பயிருக்கு காவல் இருப்பது வழக்கம்.

இதேபோல் சனிக்கிழமை இரவு காவலுக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா் மாரியை தேடிச் சென்றபோது தோட்டத்தில் அவா் யானை மிதித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இது குறித்து கடம்பூா் போலீஸாா் மற்றும் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானை தாக்கி மாரி உயிரிழந்ததை உறுதி செய்தனா். இதையடுத்து போலீஸாா் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com