தேசிய வாக்காளா் தின மாரத்தான்

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி மாரத்தான், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய வாக்காளா் தின மாரத்தான்

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி மாரத்தான், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்து, உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அலுவலா்களும் பின்தொடா்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து, ஆட்சியா் புதிய வாக்காளா்கள் 12 பேருக்கு வாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கினாா். தொடா்ந்து, தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு மாரத்தானில் பங்கேற்றவா்களுக்கும், தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த பணியாளா்கள், செவிலியா் 6 போ், 8 சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த சிறந்த வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

முன்னதாக, திண்டல் வேளாளா் கலை, அறிவியல் கல்லூரி நுழைவாயிலில் வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான் நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பாலாஜி, ஈஸ்வரன், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com