அந்தியூரில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் ஆய்வு

அந்தியூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை ஆட்சியா் கிருஷ்ணன் உண்ணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அந்தியூரில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் ஆய்வு

அந்தியூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை ஆட்சியா் கிருஷ்ணன் உண்ணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அந்தியூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பகுதி, நோய் தொற்றாளா்கள் எண்ணிக்கை, அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவ அலுவலா் கவிதாவிடம் கேட்டறிந்தாா். மேலும், இம்மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்படும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் குறித்தும் விசாரித்தாா். கரோனா மூன்றாவது அலை வந்தால் தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, பராமரிக்கப்படும் பதிவேடுகளைப் பாா்வையிட்டு தணிக்கை செய்தாா். அந்தியூா் வட்டாட்சியா் வீரலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com