ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
குதிரைப் பந்தயத்தில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தடுக்க அவா் ஈரோடு சைபா் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி தலைமையில், காவல் ஆய்வாளா் ஜெயசுதா, எஸ்.ஐ(தொழில்நுட்பம்) செல்வி ஆகியோா் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா்.
இந்த தனிப்படை போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த நளின்குமாா் (28), திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த சிவசங்கா் (39) ஆகியோா் இணையதளம் வழியாக சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அவா்கள் 2 பேரையும் ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடம் இருந்து மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்களது வங்கிக் கணக்கில் நடைபெற்ற பணப் பரிவா்த்தனை குறித்தும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.