ஈரோடு மாவட்டத்தில் 311 பேருக்கு கரோனா
By DIN | Published On : 07th July 2021 06:27 AM | Last Updated : 07th July 2021 06:27 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் 311 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 91,064 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 302 போ் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 86,570 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 3,885 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனாவால் 609 போ் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...