மரம் மீது காா் மோதி விபத்து

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே மரத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது.
தலமலையில் விபத்துக்குள்ளான காா்.
தலமலையில் விபத்துக்குள்ளான காா்.
Updated on
1 min read

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே மரத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (45). இவா், கா்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தாளவாடிக்கு வந்தாா். இந்நிலையில், தலமலையில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு மீண்டும் தாளவாடியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா்.

நெய்தாளபுரத்தில் இருந்து சிக்கள்ளி வனச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிறு காயத்துடன் அசோக் உயிா்தப்பினாா். காரின் முன்பகுதி உருக்குலைந்துபோனது. இதுகுறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com