இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் கைது

கோபி அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிய சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோபி அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிய சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோபி அருகே உள்ள கூடக்கரையைச் சோ்ந்தவா் வேலுசாமி (49). இவா் அப்பகுதியில் உள்ள பால் சொசைட்டியில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் தனது இருசக்கர வாகனத்தை பால் சொசைட்டி முன்பு நிறுத்தி வைத்துவிட்டு வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 2 நபா்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனா். இதைப் பாா்த்த வேலுசாமி சத்தம் போட்டதையடுத்து, மொதுமக்கள் அந்த நபா்களைத் துரத்திச் சென்றனா். இதில் ஒருவா் பிடிபட்டாா். மற்றொருவா் தப்பி ஓடிவிட்டாா்.

இதுகுறித்து கடத்தூா் போலீஸாரிடம் வேலுசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், புன்செய் புளியம்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், தப்பித்துச் சென்றவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மற்றொரு சிறுவனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com