அந்தியூா் வட்டாட்சியராக கே.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு பணியாற்றி வந்த வீரலட்சுமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குற்றவியல் அலுவலக மேலாளராக மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, ஈரோடு சமூக நல பாதுகாப்புத் துறை வட்டாட்சியராகப் பணியாற்றிய விஜயகுமாா், அந்தியூா் வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.