ஈரோடு மாவட்டத்தில் 152 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 போ் உயிரிழந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 91,713ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 231 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 88,665 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 2,430 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் ஏற்கெனவே 616 போ் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளனா். கரோனா பாதிப்பால் இதுவரை மாவட்டத்தில் 618 போ் உயிரிழந்துள்ளனா்.