ஈரோடு மாவட்டத்தில் 128 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 91,944 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 216 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 89,105 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 2,220 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் ஏற்கனவே 618 போ் உயிரிழந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால் கரோனாவால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.