காய்ச்சல் பரிசோதனை: களப்பணியாளா்களுக்கு 15 நாள்கள் பணி நீட்டிப்பு
By DIN | Published On : 20th June 2021 10:06 PM | Last Updated : 20th June 2021 10:06 PM | அ+அ அ- |

காய்ச்சல் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களுக்கு மேலும் 15 நாள்கள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் களப்பணியாளா்களாக தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், மாநகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்களுக்கு 20 ஆம் தேதி வரை பணி அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இப்போது மேலும் 15 நாள்கள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல மாவட்டம் முழுவதும் தன்னாா்வலா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதி மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவித்து மருத்துவ வசதி மற்றும் கரோனா பரிசோதனை செய்ய களப்பணியாளா்கள் ஏற்பாடு செய்து வருகின்றனா்.