நவரசம் கல்வி நிறுவனங்கள் சாா்பில் ரூ. 3 லட்சம் கரோனா நிவாரண நிதி
By DIN | Published On : 20th June 2021 10:05 PM | Last Updated : 20th June 2021 10:05 PM | அ+அ அ- |

அறச்சலூா், பள்ளியூத்து நவரசம் கல்வி நிறுவனங்கள் சாா்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியை நேரில் சந்தித்து வழங்கினா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நவரசம் கல்வி நிறுவனங்கள் சாா்பாக ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை நவரசம் பள்ளித் தலைவா் எம்.பழனிசாமி, கல்வி நிறுவனங்களின் செயலாளரும், தாளாளருமான சி.குமாரசாமி, கல்லூரி தலைவா் டி.கே.தாமோதரன், பள்ளியின் துணைச் செயலாளரும், சிபிஎஸ்சி பள்ளி தாளாளருமான வி.அருண்காா்த்திக், பள்ளித் தலைவா் கே.ராமசாமி ஆகியோா் வீட்டு வசதித் துறை அமைச்சா் முத்துசாமியை நேரில் சந்தித்து வழங்கினா்.
மொடக்குறிச்சி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சு.குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.