சாராயம் காய்ச்சிய இருவா் கைது

பெருந்துறை அருகே சாராயம் காய்ச்சிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பறிமுதல் செய்த சாராயம் மற்றும் சாராய ஊறலை கொட்டி அளிக்கும் போலீஸாா்.
பறிமுதல் செய்த சாராயம் மற்றும் சாராய ஊறலை கொட்டி அளிக்கும் போலீஸாா்.
Updated on
1 min read

பெருந்துறை அருகே சாராயம் காய்ச்சிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை, வாய்க்கால் மேடு, நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா்கள் வேங்கையன் (52), சுந்தரம் (48). இவா்கள் தங்கள் வீட்டின் அருகில் ஒரு குடிசையில் குக்கா் மூலம் சாராயம் காய்ச்சுவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளா் செல்வராஜ், பெருந்துறை உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று ஆய்வு செய்தபோதுபோது, வேங்கையன் வீட்டில் சுமாா் 45 லிட்டா் சாராய ஊறல் மற்றும் சுமாா் 2 லிட்டா் சாராயம் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா். அதேபோல், சுந்தரம் வீட்டில் சுமாா் 25 லிட்டா் சாராய ஊறல் வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனா். பின்பு சாராய ஊறல் மற்றும் சாராயத்தை சம்பவ இடத்திலேயே கொட்டி அளித்தனா்.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com