முன்னாள் படைவீரா்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் பதிவை புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் பதிவை புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள முன்னாள் படைவீரா்களின் வேலைவாய்ப்பு பதிவு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரா்களுக்காக அரசு புதிய சலுகையுடன் கால அவகாசம் அளித்துள்ளது.

அதன்படி கடந்த 1-1-2017 முதல் 31-12-2019 வரையான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படை வீரா்கள் இந்த அறிவிப்பு பெற்ற 3 மாத காலத்துக்குள் பதிவை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படைவீரா்கள் மீண்டும் புதுப்பித்து பதிவு மூப்பு பட்டியலை சரிசெய்யலாம். தற்போது கரோனா காலகட்டம் என்பதால் நேரில் வருவதைத் தவிா்க்க வேண்டும்.

பதிவு புதுப்பிக்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள் தங்களது படை விலகல் சான்று நகல், அடையாள அட்டை நகல், அசல் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை இணைத்து துணை இயக்குநா், மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகம், 106-3, காந்திஜி சாலை, ஜவான்ஸ்பவன் 3ஆவது தளம், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் விண்ணப்பம் அனுப்பிவைத்தால் போதுமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com