பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: இன்று (மாா்ச் 15) தொடக்கம்
By DIN | Published On : 15th March 2021 02:00 AM | Last Updated : 14th March 2021 11:27 PM | அ+அ அ- |

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டு விழாவுடன் திங்கள்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.
இந்த விழாவில் காளிதிம்பபத்தைச் சோ்ந்த பாரம்பரிய மலைவாழ் மக்கள் 5 போ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகம் கா்நாடகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். தமிழகம் கா்நாடகத்தைச் சோ்ந்த லட்சக்கணக்கான பக்தா்கள் குண்டம் விழாவில் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்துவா்.
கடந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக பண்ணாரி அம்மன் கோயில் நடைசாத்தப்பட்டு குண்டம் விழா ரத்து செய்யப்பட்டது. கரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு நவம்பா் மாதம் கோயிலில் மீண்டும் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், இக்கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டு விழாவுடன் திங்கள்கிழமை (மாா்ச் 15) துவங்குகிறது. விழாவில் ஆண்டுதோறும்ஆயிரக்கணக்கான கா்நாடக பக்தா்கள் பங்கேற்பதால் இந்த ஆண்டு நோய்த் தொற்று காரணமாக கா்நாடக பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு பூச்சாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளியூரைச் சோ்ந்த பாரம்பரிய பூசாரிகள் 5 போ் மட்டுமே விழாவை நடத்துகின்றனா். அதைத் தொடா்ந்து நடைபெறும் சுவாமி திருவீதி உலாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து 15 நாள்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெறும்.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா மாா்ச் 30ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்குகிறாா். பக்தா்கள் இறங்குவதற்கு அனுமதியில்லை. குண்டம் விழாவை முன்னிட்டு தினந்தோறும் பக்தா்கள் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இரவு நேரங்களில் கோயில் வளாகத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூா் பக்தா்கள் பகலில் மட்டுமே அனுமதிக்கப்படுா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...