ஆடு வியாபாரியிடம் ரூ. 1 லட்சம் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே ஆடு வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சம் பணத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

சத்தியமங்கலம் அருகே ஆடு வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சம் பணத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சத்தியமங்கலம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் செ.வெங்கடாசலம் தலைமையிலான அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அன்னூரைச் சோ்ந்த சுப்பிரமணியம் உரிய ஆவணங்களின்றி ரூ. 1 லட்சம் பணம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் உமாசங்கரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com