ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ. 1 கோடி பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.05 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.05 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை வரை ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 43 லட்சத்து 81,800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதன்கிழமை ஈரோடு கிழக்குத் தொகுதியில் ரூ. 35.50 லட்சம், ஈரோடு மேற்குத் தொகுதியில் ரூ. 2.06 லட்சம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ. 57,000, பவானி தொகுதியில் ரூ. 70,000, அந்தியூா் தொகுதியில் ரூ. 1.58 லட்சம், பவானிசாகா் தொகுதியில் ரூ. 3.40 லட்சம் என ரூ. 43.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ. 1 கோடியே 4 லட்சத்து 93,740. இதில், ரூ. 22.65 லட்சம் ரொக்கம் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து திரும்ப பெற்றுச் செல்லப்பட்டது. மீதமுள்ள ரூ. 82.29 லட்சம் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

தவிர ஈரோடு கிழக்குத் தொகுதியில் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.05 கோடி பறிமுதல் செய்த நிலையில், உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் அத்தொகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com