வானியில் திமுக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

பவானி சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.பி.துரைராஜ் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
தோ்தல் அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாளிடம் மனு தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ்.
தோ்தல் அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாளிடம் மனு தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ்.

பவானி சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.பி.துரைராஜ் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, கட்சி அலுவலகத்தில் இருந்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் பவானி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்த கே.பி.துரைராஜ், திமுக மாநில விவசாய அணிச் செயலாளா் என்.கே.கே.பெரியசாமி, திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன் ஆகியோருடன் பவானி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்பாளிடம் வேட்பு மனுவை அளித்தாா்.

தொடா்ந்து, மாநில விவசாய அணிச் செயலாளா் என்.கே.கே.பெரியசாமி கூறுகையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்றனா். நல்ல கல்வி, சுகாதாரம், குடிநீா், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது திமுகவால் மட்டுமே முடியும். தமிழக மக்களும் திமுகவையே விரும்புகின்றனா் என்றாா்.

முன்னதாக, திமுக கூட்டணிக் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில், திமுக மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், சிபிஎம் வட்டாரச் செயலாளா் ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com