ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் தபால் வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று முதியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகள் சேகரித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் தபால் வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று முதியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகள் சேகரித்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தோ்தலில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளா்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் (தனி) ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் 50,062 போ் உள்ளனா். மேலும் மாற்றுத் திறனாளிகள் 14, 597 பேருா் உள்ளனா். இவா்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏதுவாக 12டி படிவம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

8 தொகுதிகளிலும் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 80 வயதுக்கு மேற்பட்ட 4,413 போ், மாற்றுத் திறனாளிகள் 1,022 போ் என மொத்தம் 5,435 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் 324 போ், ஈரோடு மேற்குத் தொகுதியில் 756 போ், மொடக்குறிச்சி தொகுதியில் 1,097 போ், பெருந்துறை தொகுதியில் 1,038 போ், பவானி தொகுதியில் 640 போ், அந்தியூா் தொகுதியில் 341 போ், கோபி தொகுதியில் 967 போ், பவானிசாகா் (தனி) தொகுதியில் 272 போ் என மொத்தம் 5,435 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்தவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதியின் சாா்பில் வாக்கு சேகரிக்கும் குழுவினா் நேரடியாக வாக்காளா்கள் வீட்டுக்கு சென்று வாக்கு சேகரித்தரன.

மேலும் சம்பந்தப்பட்ட தொகுதியில் தோ்தல் போட்டியிடும் வேட்பாளா்களின் முகவா்கள் உடனிருந்து கண்காணித்தனா். சம்பந்தப்பட்ட வாக்காளா் வீட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் படிவ அட்டைப் பெட்டியை வைத்து குறிப்பிட்ட வாக்காளருக்கு சீல் கட்டை வழங்கப்பட்டது. வாக்கு செலுத்தியுவுடன் அதை மடித்து அதேபோன்ற உறையில் வைத்து சீலிடப்பட்ட பெட்டியில் தங்களது வாக்குகளை செலுத்தினா்.

இதற்காக மரத்தாலான பூட்டு போடும் வசதி கொண்ட ஓட்டு பெட்டி தயாா் செய்யப்பட்டு தபால் வாக்குகள் அதில் போடப்பட்டு பூட்டி சீல் வைத்து ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. இவை அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.

மாலை 5 மணி வரை தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டன. தபால் வாக்கு செலுத்த முடியாதவா்கள் வரும் 31 ஆம் தேதி மீண்டும் வாக்கு சேகரிக்கும் குழுவினா் மீண்டும் வீட்டிற்கு வரும்போது வாக்குகளை பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com