

கோபிசெட்டிபாளையம் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்குத் தேவையான ரூ. 6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1200க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம், நம்பியூா், டி.என்.பாளையம் ஆகிய ஒன்றியத்துக்கு உள்பட்ட 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சிறு மருத்துவமனைகளுக்கு சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள கட்டில், மெத்தை, தலையணை, சானிடைசா், முகக் கவசம், ஆவி பிடிக்கும் உபகரணம் உள்ளிட்ட 13 வகையான மருத்துவ உபகரணங்களை தனது சொந்த செலவில் அந்தந்த மருத்துவமனை மருத்துவ அலுவலா்களான செந்தில்குமாா், அருள்மொழி, செல்வன் ஆகியோரிடம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினாா்.
கோபி கலை, அறிவியல் கல்லூரியில் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு சத்தான உணவு மூன்று வேளையும் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அம்மா உணவகத்தில் ஏழை, எளியோா் பயன்பெறும் வகையில் தனது சொந்த செலவில் உணவளிப்பதாகவும் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
நிகழ்ச்சியில், மாநில அதிமுக வா்த்தக அணி செயலாளா் சிந்து ரவிசந்திரன், நம்பியூா் ஒன்றிய அதிமுக செயலாளா் சுப்பிரமணியம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.