ஈரோடு மாவட்டத்தில் 1,568 பேருக்கு கரோனா: 3 போ் பலி
By DIN | Published On : 19th May 2021 03:53 AM | Last Updated : 19th May 2021 03:53 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,568 போ் கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். 3 போ் உயிரிழந்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,758 ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 669 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 27,907 போ் குணமடைந்துள்ளனா். 7,652 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளிலும், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே 198 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 201ஆக உயா்ந்துள்ளது.