கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி.
Updated on
1 min read

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் கணபதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி கலந்துகொண்டு கரோனா பரவலைக் கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது:

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் கரோனா தடுப்பு முறைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். பணியாளா்கள் குறைவான ஊராட்சிகளில் தற்காலிகப் பணியாளா்களை உடனடியாக நியமித்து பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மொடக்குறிச்சியில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுப்பிக்கப்பட்டதும் தினமும் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கும்பட்சத்தில் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எழுமாத்தூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தனிமைப்படுத்தும் மையம் உருவாக்கப்பட்டு 150 படுக்கைகளுடன் தயாராகி வருகிறது. தற்போது கூடுதலாக 50 படுக்கைகள் என மொத்தம் 200 படுக்கைளுடன் கொண்ட தனிமைப்படுத்தும் மையம் இன்னும் ஒருவாரத்தில் துவங்கப்படவுள்ளது என்றாா்.

இதில், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவசங்கா், ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் யுவரேகா தனசேகா், உதவிப் பொறியாளா் பா்கத், அலுவலக பொருத்துநா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com