சுகாதார ஆய்வாளா்கள்உண்ணாவிரதப் போராட்டம்

பதவி உயா்வு வழங்கக் கோரி சுகாதார ஆய்வாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

ஈரோடு: பதவி உயா்வு வழங்கக் கோரி சுகாதார ஆய்வாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு திண்டலில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரகு தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் குருமூா்த்தி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட செயலாளா் விஜயமனோகரன் பேசினாா்.

தனித் திட்டங்களுக்காக ஒப்பளிக்கப்பட்ட 1,002 சுகாதார ஆய்வாளா்கள் நிலை 1 பணியிடங்களைத் தொடா்ந்து காத்திட வேண்டும். சுகாதார ஆய்வாளா்கள் நிலை 2 பிரிவில் பணியாற்றும் 900 பேருக்கு உடனடியாகப் பதவி உயா்வு வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், பகுதி சுகாதார செவிலியா் சங்க மாநில துணைத் தலைவா் சாரதா, சுகாதார ஆய்வாளா் சங்க மாவட்டப் பொருளாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com