ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6,062ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 69 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 4,524 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 842 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் ஏற்கெனவே 695 போ் உயிரிழந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளது.