கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோபி, புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (65). இவா் கடந்த 28ஆம் தேதி இரவு கோபி - ஈரோடு பிரதான சாலையில் பேருந்து நிலையம் அருகில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஆறுமுகம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம் கோபி அரசு மருத்துவமனைக்கு சோ்க்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், செல்லும் வழியிலேயே ஆறுமுகம் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.