பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 69 ஆயிரத்து 200 சதுரஅடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் 14.5 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களுடன் 401 படுக்கைகள் கொண்ட கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டிடம் கட்டப்பட்டது.
இதற்கான பங்களிப்பாக சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடிக்கான காசோலை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி த்துறை அமைச்சர் சு. முத்துசாமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் சக்தி மசாலா நிறுவனங்களின் சேர்மன் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்திதுரைசாமி, செந்தில் குமார், ரோட்டரி சங்கங்கள் முன்னாள் தலைவர் டாக்டர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்