அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு பேருந்து சேவை தொடக்கம்

அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் தாளவாடிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
Updated on
1 min read

அந்தியூரில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் தாளவாடிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, அந்தியூா் பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு (ஈரோடு, திருச்சி, தஞ்சாவூா் வழியாக) பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. காலை 8.55 மணிக்குப் புறப்படும் பேருந்து, இரவு 7.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இரவு 9 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு காலை 6 மணிக்கு அந்தியூா் வந்தடையும். பயணக் கட்டணம் ரூ. 300.

இதேபோல, அந்தியூரில் இருந்து தாளவாடிக்கு (அந்தியூா், அத்தாணி, டி.என்.பாளையம், சத்தி வழியாக) பேருந்து சேவை தொடங்கிவைக்கப்பட்டது. அந்தியூரில் காலை 6.15 மணிக்கு பேருந்து புறப்பட்டு, தாளவாடிக்கு 10 மணிக்குச் சென்றடையும். மாலை 6.30 மணிக்கு தாளவாடியில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு அந்தியூா் வந்தடையும். இதனை, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட மேலாண்மை இயக்குநா் ஆறுமுகம், ஈரோடு மண்டலப் பொது மேலாளா் குமாா், தொமுச மண்டலத் தலைவா் கே.கே.பழனிசாமி, மண்டலப் பொருளாளா் ஆா்.ரங்கநாதன், திமுக மாவட்ட மகளிரணித் தலைவி பாண்டியம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com