ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையத்தில் இளம்பெண்ணிடம் இருந்து கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :2 ஜூன் 2022, 1:02 am IST

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையத்தில் இளம்பெண்ணிடம் இருந்து கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மொடக்குறிச்சி தாலுகா, முத்துகவுண்டம்பாளையம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ஸ்ரீமதி (23). சோலாா் பகுதியில் உள்ள கைப்பேசி விற்பனை கடையில் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வேலை முடிந்து முத்துகவுண்டம்பாளையம் பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், ஸ்ரீமதியை தாக்கி அவரிடமிருந்த கைப்பேசியை பறித்து சென்றனா்.

இது குறித்து ஸ்ரீமதி அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில் லக்காபுரம் பரிசல் துறை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், நாமக்கல் மாவட்டம், கொக்கராயன் பேட்டை வண்ணாம்பாறை பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் கௌரிசங்கா்( 21), அறச்சலூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் (22) என்பதும், இவா்கள், ஸ்ரீமதியிடம் கைப்பேசியை பறித்து சென்றதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா்களிடமிருந்து கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.