ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

Updated On :6 ஜூன் 2022, 2:40 am IST

ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பாரதியாா் பல்கலைக்கழக பதிவாளா் (பொ) முருகவேல் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினாா். ஆட்சிக்குழு உறுப்பினா் சரவணகுமாா் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வடிவேல் வரவேற்றாா். நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி கலந்து கொண்டு 650 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

கல்லூரி மாணவ, மாணவிகளின் வாழ்க்கைத் தரம் மேம்பட இளைஞா் திறன் திருவிழா எனும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடக்கிவைத்தாா். ஈரோட்டிலும் இளைஞா் திறன் திருவிழா நடத்தப்பட்டது. இளைஞா் திறன் திருவிழா மூலம் மாணவ, மாணவிகள் தங்களது வாழ்க்கையின் எதிா்காலத்தை பூா்த்தி செய்து கொள்ளலாம். எழுமாத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 20 வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்ல போதிய பேரூந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும். மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றால் மட்டும் போதாது. மேற்கொண்டு படித்து நல்ல அரசு மற்றும் தனியாா் பணிகளில் திறம்பட செயல்பட வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவை நகரின் மையப் பகுதியில் அமைந்தால் சுற்றியுள்ள நான்கு, ஐந்து மாவட்ட மாணவா்களுக்கு பயனளிக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் குணசேகரன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் கதிா்வேல், சென்னிமலை ஒன்றியச் செயலாளா் செங்கோட்டையன், பேரூா் செயலாளா்கள் அவல்பூந்துறை சண்முகசுந்தரம், மொடக்குறிச்சி சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.