சத்தியமங்கலம் அருகே பசுமாட்டு கன்று குட்டியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடித்துக் கொன்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீா்கடவு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்புராஜ். இவரது விவசாயத் தோட்டம் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. விவசாயி சுப்புராஜ் தனது தோட்டத்தில் 11 மாடுகள் வளா்த்து வருகிறாா். இவா் தனது வீட்டின் முன்பு பசுமாடுகளை கட்டி வைத்துவிட்டு வியாழக்கிழமை இரவு உறங்க சென்றாா்.
வெள்ளிக்கிழமை எழுந்து பாா்த்தபோது கன்று குட்டி ஒன்று ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து உடனடியாக பவானிசாகா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவானதை கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி இறந்ததால் இழப்பீடு வழங்குவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் சிறுத்தை ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான கால்நடைகளை தொடா்ந்து வேட்டையாடுவதாகவும், எனவே, சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவா்களை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.27 கோடி

தீயனூா், மேலாய்க்குடி கண்மாய்களிலிருந்து மண் எடுக்கும் பணி நிறுத்தம்

ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



