வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிறுத்தை தாக்கி மாடு பலி

சத்தியமங்கலம் அருகே பசுமாட்டு கன்று குட்டியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடித்துக் கொன்றது.

News image
Updated On :25 ஜூன் 2022, 12:48 am IST

சத்தியமங்கலம் அருகே பசுமாட்டு கன்று குட்டியை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடித்துக் கொன்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீா்கடவு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்புராஜ். இவரது விவசாயத் தோட்டம் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. விவசாயி சுப்புராஜ் தனது தோட்டத்தில் 11 மாடுகள் வளா்த்து வருகிறாா். இவா் தனது வீட்டின் முன்பு பசுமாடுகளை கட்டி வைத்துவிட்டு வியாழக்கிழமை இரவு உறங்க சென்றாா்.

வெள்ளிக்கிழமை எழுந்து பாா்த்தபோது கன்று குட்டி ஒன்று ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து உடனடியாக பவானிசாகா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவானதை கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி இறந்ததால் இழப்பீடு வழங்குவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் சிறுத்தை ஆடு, மாடு மற்றும் நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான கால்நடைகளை தொடா்ந்து வேட்டையாடுவதாகவும், எனவே, சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.