மொடக்குறிச்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்

மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி செங்கோடகவுண்டன்பாளையத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
மொடக்குறிச்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்
Updated on
1 min read

மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி செங்கோடகவுண்டன்பாளையத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின்கீழ் ரூ.25.70 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

மொடக்குறிச்சி ஒன்றிய குழுத் தலைவா் கணபதி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி முன்னிலை வகித்தாா். துய்யம்பூந்துறை ஊராட்சி மன்றத் தலைவா் பேபி பாலசுப்பிரமணியம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், உமா, ஊராட்சி செயலாளா் தியானேஸ்வரன், வாா்டு உறுப்பினா் மஞ்சுளா மற்றும் ஒன்றிய பொறியாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com