ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மொடக்குறிச்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்

மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி செங்கோடகவுண்டன்பாளையத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 2:44 am IST

மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி செங்கோடகவுண்டன்பாளையத்தில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின்கீழ் ரூ.25.70 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.

மொடக்குறிச்சி ஒன்றிய குழுத் தலைவா் கணபதி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி முன்னிலை வகித்தாா். துய்யம்பூந்துறை ஊராட்சி மன்றத் தலைவா் பேபி பாலசுப்பிரமணியம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், உமா, ஊராட்சி செயலாளா் தியானேஸ்வரன், வாா்டு உறுப்பினா் மஞ்சுளா மற்றும் ஒன்றிய பொறியாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.