அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விதைப் பண்ணையில் பயிற்சி

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா்களுக்கு, பவானி அரசு விதைப் பண்ணையில் 5 நாள்கள் உள்ளுறைப் பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் பவானி அரசு விதைப் பண்ணை உதவி இயக்குநா் சத்யராஜ்.
பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் பவானி அரசு விதைப் பண்ணை உதவி இயக்குநா் சத்யராஜ்.
Updated on
1 min read

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா்களுக்கு, பவானி அரசு விதைப் பண்ணையில் 5 நாள்கள் உள்ளுறைப் பயிற்சி வழங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசு சாா்பில், சமக்ரா சிசஷா திட்டத்தின் கீழ், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு வேளாண்மை பாடப் பிரிவு மாணவா்கள் 32 பேருக்கு, பவானி அரசு விதைப் பண்ணையில் நவம்பா்

21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு உள்ளுறைப் பயிற்சி வழங்கப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியா் ரவிசந்திரன் பங்கேற்று பயிற்சியைத் தொடங்கிவைத்தாா். பள்ளி வேளாண் ஆசிரியா் கந்தன், வேளாண் பயிற்றுநா் உஷாநந்தினி, பவானி அரசு விதைப் பண்ணை வேளாண்மை அலுவலா்கள் மிதுன், கோகுல், முருகேஷ் ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில், திரவ உயிா் உரங்கள், விதை நெல் உற்பத்தி, நுண்ணுயிரி மற்றும் உயிா் உரங்கள், விதை நெல் சுத்திகரிப்பு, நாற்றங்காலில் நெல் பயிா் நடவு செய்தல், பாரம்பரிய நெல் உற்பத்தி, பல்வேறு ஒட்டுண்ணிகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை நடந்த நிறைவு விழாவுக்கு, பவானி விதை பண்ணை வேளாண்மை உதவி இயக்குநா் சத்யராஜ் தலைமை வகித்து பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com